தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக உள்ள நிலையில் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பல முன்னணி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால் பலரது மனதை கொள்ளை கொண்டவர்  பிரபல முன்னணி

சீரியல் நடிகர் தீபா. இவர் அன்பே சிவம், பிரியமான தோழி , நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல முன்னணி தொடர்களில் நடித்துள்ள நிலையில் தற்போது பல தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தீபா ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தீபா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார் இருப்பினும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து இவருக்கும் சாய் கணேஷ் பாபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு

வாழ்ந்து வருகின்றனர் . இதையடுத்து தற்போது தங்களது திருமணத்தை தெரியபடுத்தும் வகையில் தனது இணைய பக்கத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும்படியான பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர் . மேலும் சாய் கணேஷ் பாபு பல முன்னணி தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார்……………..

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Deepa babu (@deepababu90)