பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது எனலாம் இந்நிலையில் நடிகை ஒருவர் கவுண்டமணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.  தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் நடித்தவர் நடிகை ஒய்.விஜயா. இவர் 1974-ம் ஆண்டு சிவாஜி நடித்த வாணி ராணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்ஜிஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன், வடிவேலு உள்ளிட்ட பல

நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பின்னர், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வில்லியாகவும், காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரது படத்தில் நடந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “காமெடி லெஜன்ட் கவுண்டமணியுடன் நடிக்கும் போது உஷாராக இருக்க வேண்டும், இல்லையென்றால் நம்மை கலாய்த்து

எடுத்து விடுவார். அப்போதெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் எல்லாம் கிடையாது, அனைவரும் ஒரே அறையில் தங்குவோம், சாப்பாடு வந்தால் ஒன்றாக மரத்தடியில் அமர்ந்து கொண்டு உணவு உண்போம், கோ டைரக்டர் சீன் சொன்னால் ஒன்றாக அமர்ந்து கொண்டு கேட்போம், எப்படியாவது சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தை மட்டுமே வெளிப்படுத்தி வந்தோம்.

ஆனால், சமீப காலமாக பெண்கள் காஸ்டிங் கோச் உள்ளிட்ட விவகாரங்களை கிளப்புவது பப்ளிசிட்டிகாகவே எனத் தோன்றுகிறது என்றும் நாங்கள் நடித்த காலத்தில் அதெல்லாம் கிடையவே கிடையாது” என்று பேசியுள்ளார். இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து இதற்கு பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்………………..