தற்போது உள்ள நிலையில் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது இவர் நடிப்பில் அன்னபூரணி என்ற படத்தில்

நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா எனப் பல பிரபலங்கள்

நடித்து உள்ளனர். இந்நிலையில் அன்னபூரணி படத்திற்காக நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் வாயடைத்து போனதோடு பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……………………