சமீபகாலமாக திரையுலகில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த வதந்திகளுக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது எனலாம் இந்நிலையில் நடிகை சதா குறித்து பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தமிழில் ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில்

அஜித், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார். மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் குறித்து திரைப்பட பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், “சதாவின் கெட்ட பழக்கம் தான் அவரின் வாழ்க்கையை பாதித்து இருக்கிறது. அவர் எப்போதும் அதிகமாக புகைப்பிடிப்பார். நானே பல முறை நேரில் பார்த்து இருக்கிறேன். அவர் போதைக்கு அடிமையானதால் பல படங்களில் இருந்து

நீக்கப்பட்டார்.சைவ உணவு தான் அவர் சாப்பிடுவார். அதனால் திரைப்படங்களில் இருந்து விலகி ஓட்டலை நடத்தி வருகிறார். தற்போது வனவிலங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார். மும்பையில் காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்தார். அந்த காஃபி ஷாப்பில் முன்னால்

இருக்கும் செடிகள் முதல் அங்கு போடப்பட்டு இருக்கும் நாற்காலிகள் வரை என அனைத்தையும் அவரே பார்த்து பார்த்து செதுக்கினார்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் வெளியான  நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்…………………..