தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருவதோடு பல இளம் நடிகர்களுக்கு முன் மாதிரியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இந்நிலையில் இவருடன் , பிரபல நடிகை ஒருவர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் நடிப்பதற்கு பல நடிகர்,

நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து 4 முறை நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துள்ளார். அந்த வகையில், ஷங்கர் இயக்கிய தி பாஸ் படத்தில் சதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடக்காமல் போனது. ப வெள்ளி விழாவில் ரஜினி பேசுகையில் ஐஸ்வர்யா ராயை

அணுகுமாறு அவர்களிடம் சொன்னேன். அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் எனக் கூறியிருந்தார். பாபா படத்தில் ஐஸ்வர்யா ராய்யை படக்குழு நடிக்க வைக்க விரும்பினாலும், அவர் விரும்பவில்லை. படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய்யை கேட்டனர். ஆனால், அதுவும் நடக்காமல் போனது. இறுதியாக, எந்திரன்

படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார். ஐஸ்வர்யா ராய் உதறி தள்ளிய படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சமீபத்தில் இந்த தகவல்கள் வெளியான நிலையில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…………………..