தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார், படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார்.  இதற்கு

நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு” என்று காட்டமாக பதிலளித்தார். மேலும், அவர் பேசியதற்கு பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் பதிவிட்ட த்ரிஷா தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது கடவுள் குணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், “நான் மன்னிப்பு கேட்கவில்லை. தொலைபேசியில் மரணித்துவிடு என்று சொன்னதை

மன்னித்து விடு என்று மக்கள் தொடர்பாளர் தவறாக புரிந்து கொண்டார்” என கூறியிருந்தார். மேலும், இது குறித்து பேட்டியில், “தப்பே செய்யாத நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வீடியோவை முழுசா ஒருமுறை பாருங்க, அதுல நான் தப்பா பேசி இருந்தா என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க. மேலும் காவல்நிலையத்திற்கு சென்று சில கேள்விகளுக்கு பதில் அளித்தேன் வீட்டிற்கு வந்ததும், நைட் தூக்கம் வரவில்லை. இதனால், பார்த்திபன் ஸ்டைலில் ஒரு

அறிக்கையை என் பிஆர்ஓவிடம் தொலைபேசியில் சொன்னேன். சக நடிகை த்ரிஷாவின் கடந்த கால வாழ்க்கை குறித்து பல செய்தி வெளிவருகிறது. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒரு நடிகை தவறு செய்தால், அதில் ஹீரோக்களுக்கும் பெரும் பங்கு இருக்கு என்பதால், த்ரிஷா என்னை மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால், அது மன்னித்துவிடு என்றாகி விட்டது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………