பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் வனிதாவின் முகத்தை பதம் பார்த்தது உண்மையில் யாரென்பதற்கான சந்தேகங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் வனிதா. இவர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து காதலரை திருமணம் செய்து கொண்டு திருமணம் வாழ்க்கையில் நுழைந்து விட்டார். ஆகாஷிற்கும் வனிதாவிற்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பின்னர் விவாகரத்து செய்து விட்டு ரஞ்சன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. ஆனால் தற்போது இருவரும் வேண்டாம் என்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கை இரண்டு மூன்று மாதங்களில்

விவாகரத்து பெற்று தற்போது பீட்டர் பால் இறந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பிக்பாஸ் பிரதீப்பின் ஆதரவாளர் ஒருவர் முகத்தை தாக்கியதாக சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆனால் உண்மையில் யார் இந்த வேலையை

பார்த்தது என்று சரியாக தெரியவில்லை. வனிதா பிரதீப்பின் மார்கெட்டை இறக்கி ஜோவிகாவிற்கு ஆதரவை அதிகரிக்க இப்படி பொய் கூறுகிறார் என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனைதொடர்ந்து பலரும் இதனை ட்ரோல் செய்து பங்கம் செய்து வருகின்றனர்……………