தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தது மட்டுமின்றி தனது 4 வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் கந்தன் கருணை, ஆதி பராசக்தி, நம் நாடு உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறுமியாகவே நடித்திருந்தார். தனது 13வது வயதில்

கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான மூன்று முடிச்சு படத்தில் நாயகியாக தடம் பதித்தார். 16 வயதினிலே படத்தில் மயிலி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவி நடிப்பை இப்போதும் மக்கள் பாராட்டி வருகிறார்கள். இப்படி நடிகை ஸ்ரீதேவியின் திரைப்பயணத்தில் சிறப்பாக அமைந்த படங்கள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அவர் இப்போதும் நம்முடன் இல்லை என்பது இந்திய சினிமா ரசிகர்களின் பெரிய வருத்தமாக உள்ளது. தற்போது

நடிகை ஸ்ரீதேவி இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி பக்கத்தில் இருப்பவர்கள் யார் என்ற கேள்வி தான் அதிகம் வருகிறது. அவர்கள் வேறுயாரும் இல்லை நடிகை நக்மா மற்றும் ஜோதிகா தான். இந்நிலையில் இவர்கள் தனது சிறுவயதில் ஸ்ரீ தேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம் வைரளாகி வருகிறது……………..