சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனி ஒரு இடத்தினை பிடித்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா அதன்பின்பும் கணவரிடம் இருந்து தனியாக வாழ்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகாரளித்தார்ர். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் இருக்கும் ரச்சிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார்.

இதற்கிடையில் தினேஷ் தன் மனைவிக்காக தான் பிக்பாஸ் சென்றதாகவும் அங்கு சில விசயங்களையும் பகிர்ந்தார். சமீபத்தில் ரச்சிதா பேட்டியொன்றில், நான் ஆண்களை பார்த்து ஏங்கி இருப்பதாகவும் ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கோ வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் அவர்களுக்கு 5 நிமிடம் போது தயாராகிவிடுகிறார்கள்.

ஆனால் பெண்கள் எங்களால் தான் அப்படி தயாராக முடியவில்லை என்ற வேதனைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் புடவை அணியும் போது நான் சிரமப்பட்டு அணிவதாகவும் அதுதா என் அடையாளமும் என்று கூறியிருக்கிறார்.

குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியலின் போது கட்டிய சேலையை போல் பெண்கள் பலர் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். என் ஆடை விசயத்தில் கவனம் செலுத்த அதுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

இருந்தாலும் ஆண்கள் 5 நிமிடத்தில் முடித்துவிடக்கூடிய வேலையை பெண்கள் 15 அல்லது 30 நிமிடங்களாக செய்ய வேண்டி இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.