சமீபத்தில் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்த விஷயம் இளம் நடிகை ஷீலா ராஜ்குமார் தனது கணவர் விட்டு திடீரென பிரிந்தது தான்.

நம்ம வீட்டு பிள்ளை, மண்டேலா, திரௌபதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். மேலும் சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கூட கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

நடிகை ஷீலா ராஜ்குமார்,  தம்பி சோழன் என்பவரை காதலித்த திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களை எதிர்த்து தான் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. கணவரிடம் இருந்து பிரிவு

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தனது கணவர் தம்பி சோழனிடம் இருந்து பிரிந்துவிட்டதாக நடிகை ஷீலா ராஜ்குமார் ஷாக்கிங் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இவர்களுக்கு இடையே என்ன நடந்தது, ஏன் இந்த பிரிவு என கேட்ட ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே சமயத்தில் இவர்கள் இவருடைய திருமண புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..