திரையுலகில் ஜாம்பவான்களாக வாழ்ந்தவர்கள் சிலர் மட்டுமே. அப்படி அந்த சிலரில் மிகமுக்கியமான ஒருவர் தான் மணிவண்ணன். இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர்.

இவர் 1980ல் தனது திரை பயணத்தை எழுத்தாளராக துவங்கிய மணிவண்ணன், அதன்பின் 1982ல் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை, நூறாவது நாள், ஜல்லிக்கட்டு போன்ற திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக எப்படி மணிவண்ணன் நம்முடைய மனதில் நீங்காஇடத்தை பிடித்துள்ளாரோ, அதே போல் தான் நடிகராகவும் என்றுமே நம் நினைவில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

இவருடைய வில்லத்தனமான நடிப்பு பட்டையை கிளம்பினாலும், நகைச்சுவையான நடிப்பும் ரசிகர்கள் பட்டாளமே அதிகம். அதுவும் அரசியல் சட்டயர் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இவரை அதில் அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி திரையுலகில் பல திறமைகளை கொண்டுள்ள மணிவண்ணன், செங்கமலம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், மணிவண்ணன் தனது மகன் மற்றும் மகளுடன் எடுதுக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..