தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பல வருடங்களாக பயணித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் ரா. பார்த்திபன் திரையுலகில் உதவி இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதனைதொடர்ந்து ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு தயாரிப்பாளர், இயக்குனர், கதை ஆசிரியர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களையும் புது ,மாறுதல்களையும் கொண்டு

வரும் பெருமை பார்த்திபனையே சேரும். இந்நிலையில் சமீபத்தில் இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படம் இந்திய சினிமா உலகில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்து பல பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் பார்த்திபன் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து கேட்கையில் இவருக்கு ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகை சீதாவுடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு இரு

மகள்கள் மற்றும் மகன் உள்ளார்கள் இருப்பினும் ஒரு சில காரணங்களால் இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பெட்டி ஒன்றில் சித்ரா லட்சுமணன் அவர்கள் பார்த்திபன் அவர்களிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேட்டபோது, எனது இருமகள்களுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்து விட்டது அடுத்து எனது மகன் திருமணம் தான் ஒரு வேலை அவனுக்கு முடிந்த பின்னர் நான் திருமணம் செய்து கொள்வேன் இல்லை என்றால் எனக்கு பின்னர் அவனுக்கு திருமணம் நடக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்

எனக்கு திருமணம் என்பதை தாண்டி எனக்கு ஒரு துணை வேண்டும் அதுமட்டுமின்றி ஆசைக்கும் வயசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஓபனாக கூறியதோடு அதே மேடையில் அவரது ராசி, நட்சத்திரம் எல்லாம் கூறி யாராவது பெண் இருந்தால் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……