தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே பலருக்கும் போதாத காலமாக இருந்து வருகிறது அதற்கு ஏற்றாற்போல் பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது வகையில் தொடர்ந்து இன்னல்களில் சிக்கி வருகின்றனர். அதிலும் இந்த நிகழ்வு கடந்த சில மாதங்களாக தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிகளவில் அரங்கேறி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வாக பிரபல முன்னணி சீரியல் நடிகையான ஆலியா மனசா கார் விபத்தில் சிக்கி

மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் . இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் இந்த சீரியலை தொடர்ந்து பல முன்னணி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள இவர் தன்னுடன் சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தொடர்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக

இருக்கும் நிலையில் சீரியலில் நடிப்பதை தவிர்த்து இருந்தார். இதையடுத்து தற்போது குழந்தையை பெற்று எடுத்த நிலையில் மீண்டும் சன் டிவியில் வெளியாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் நேற்றைய நாளில் படபிடிப்பு முடிந்து வீடு திரும்பிய நிலையில் எதிர்பாரதவிதமாக கார் விபத்து ஏற்பட்டு அதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில்

அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூரியுள்ளனர். இதனைதொடர்ந்து அவருக்கு காலில் பெரிய அளவில் கட்டு போடபட்டிருக்கும் நிலையில் காலில் கட்டுடன் மருத்துவமனையில் புகைபடம் எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆலியா மனசா. இந்நிலையில் அந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு அவர் நலமுடன் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றன்ர் ……..