வெள்ளித்திரையில் படங்களில் தற்போது புதுமுகங்களாக பல இளம் நடிகைகள் ஹீரோயினாக வந்துவிட்ட நிலையிலும் அந்த காலத்தில் படங்களில் ஹீரோயின்களாக நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் மக்கள் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை தங்களது நடிப்பு மற்றும் வசீகரமான அழகின் மூலமாக தக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோயினாக பல முன்னணி

நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை கண்ணழகி என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் மீனா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இல்லாத நிலையிலும் தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து

 

வந்தார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார் இதையடுத்து சில காலம் தனிமையில் வாடி வந்த மீனா தற்போது தனது நண்பர்களின் உதவியுடன் மீண்டு வந்து படங்களில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து

வைக்க முடிவு செய்து அவர்களது நெருங்கிய உறவுகார நண்பர் ஒருவரை குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகவும் பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மீனா தரிப்பினரிடம் கேட்டபோது இது முற்றிலும் பொய்யான தகவல்கள் வெறும் வதந்தி என கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….