திரையுலகில் பொருத்தவரை ஹீரோயினாக நடிக்க தற்போது பல இளம் நடிகைகளும் போராடி வரும் நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி  நடிகைகளாக இருந்து வந்ததோடு கடந்த சில வருடங்களில் மட்டும் பிரபலத்தின் உச்சிக்கே சென்றவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பழமொழி படங்களில் அம்மிணியின் கால்சீட்க்காக பல முன்னணி இயக்குனர்களும் தவித்து வரும் அளவிற்கு கைவசம் பல படங்களை வைத்து நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமந்தா தனது

இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அனைவரையும் அதிர வைத்து இருந்தார். காரணம் அந்த பதிவில் தனக்கு மையோசிடிஸ் எனும் ஆட்டோஇம்முன் நோய் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையில் இப்போது இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து தொடர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்து வரும் நிலையிலும் நோயின் தாக்கம் துளியும் குறையாத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற் சிகிச்சைக்காக தென்கொரியா சென்று திரும்பி இருந்தார். இதையடுத்து சமீபத்தில் சகுந்தலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு

விழாவில் கலந்து கொண்ட சமந்தா இறுதியில் தனது நோயின் காரணமாக மனதளவில் மிகவும் வேதனையடைந்து மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுது இருந்தார். இந்நிலையில் இதைபார்த்து கலங்கிப்போன அவரது ரசிகர்கள் பலரும் ‘ தயவு செய்து நீங்கள் ஆழாதீர்கள் நாங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கிறோம் என ஆறுதல் கூறியிருந்தார்கள். அதுமட்டுமின்றி பலரும் அவர் மையோசிடிஸ் நோய்க்கு பின்னர் அவரது அழகும் வசீகரமும் அப்படியே மாறிவிட்டதாக கருத்து தெரிவித்து

இருந்தார். இதையடுத்து இதற்கு பதில் கொடுத்த சமந்தா தனது இணைய பக்கத்தில், நான் மேற்கொண்டது போன்று பலமாதங்கள் சிகிச்சையை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என நான் இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன், மேலும் என்னுடைய அன்பை உங்களுடைய வசீகரத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……