தற்போது சினிமாவில் ஹீரோவாக பல துறைகளை சார்ந்தவர்களும் நடித்து வரும் நிலையில் தனது கலைபயனத்தை உதவி இயக்குனராக தொடங்கிய நிலையில் இன்றைக்கு இயக்குனர், ஹீரோ , வில்லன், தயாரிப்பாளர் என துறைகளில் கலக்கி வருவதோடு தனக்கென தனிபெரும் கூட்டத்தை ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த வாலி

படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே மாறுபட்ட கதையால் ,மக்கள் பலரின் மனதை கவர்ந்ததை அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நிலையில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து பல படங்களில் நடித்தும் இயக்கம் வந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி

நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வருகிறார். இதனைதொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்து பிசியாக நடித்து வரும் நிலையில் எஸ் ஜே சூர்யா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டபோது எஸ் ஜே சூர்யா தற்போது கடமை செய் எனும் படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகையான யாஷிகா

நடித்து  வரும் நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போன நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வந்த  வண்ணம் உள்ளது மேலும் இதை உறுதிபடுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………