பொதுவாக தமிழ் சினிமாவில் பொறுத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இதில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் எட்டு தோட்டாக்கள் இந்த படத்தில்

கதாநாயகியாக நடித்ததன் மூலமாக தமிழ் மக்களிடையே தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அபர்ணா முரளி. தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சூரரை போற்று படத்திலும்

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் தங்கம் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சிக்காக கல்லூரி

ஒன்றிற்கு சென்று இருந்த நிலையில் அங்கு மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த போது அந்த கல்லூரியின்  மாணவர் ஒருவர் மேலே வந்தபடி அபர்ணாவின் கையை பிடித்து எழுப்பியதோடு அவரது தோளின் மேல் கையைபோட்டு அனைவர் முன்னிலையிலும் அநாகரீமாக நடந்து கொண்டார். இதனைதொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை இதை பார்த்த பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருவதோடு பலரும் அந்த மாணவனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்……..