பிரபல முன்னனி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது நூறு நாட்களை கடந்து இறுதி வாரத்தை எட்டியுள்ளது இதையடுத்து இன்னும் சில தினங்களில் பைனல் வர உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மைனா, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் ஆகியோர் இறுதி வாரத்தில் பைனல் நோக்கி போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல்

பிக்பாஸ் இந்த முறையும் இறுதி வாரத்தில் போட்டியாளர்களின் ஆசையை தூண்டும் வகையில் பணபெட்டியை வைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு பதிலாக மூன்று லட்சத்துடன் கூடிய பணமூட்டையை வைத்து இருந்தார். இதையடுத்து இதை யார் எடுப்பார்கள் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் கதிரவன் பணமூட்டியை எடுத்துக்கொண்டு முதல் ஆளாக இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டில்

இருந்து வெளியேறி விட்டார். இதனைதொடர்ந்து இந்த சீசனில் பல மாறுதல்களை கொண்டு வந்த நிலையில் பிக்பாஸ் யாரும் எதிர்பார்த்திராத நிலையில் மீண்டும் மூன்று லட்சத்துடன் கூடிய பணபெட்டியை வைத்தார் மேலும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் என கூறிய நிலையில் இந்த முறை யார் எடுக்க போகிறார்கள் என பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் பதிமூன்று லட்சத்தை எட்டிய நிலையில்

அமுதவாணன் இம்முறை பணபெட்டையை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் இவர் பைனல் வரை வருவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் பலருக்கும் இது ஏமாற்றத்தை கொடுத்து இருந்த நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..