பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி இன்றுடன் 104 நாட்களை கடந்த நிலையில் ஏறக்குறைய 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இறுதி வாரத்தில் மீதம் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே பைனல் நோக்கி போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பல மாறுதல்களை கொண்டு வந்த பிக்பாஸ் இருமுறை பணப்பெட்டி திடீர் எவிக்சன் என பல திருப்பங்களை

கொண்டு வந்து கொண்டுள்ளது. இப்படியிருக்கையில் மூன்று லட்சம் பணமூட்டையுடன் கதிரவன் முதலில் வீட்டை வெளியேறிய நிலையில் அடுத்தகட்டமாக அமுதவாணன் சுமார் 13 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் . இந்நிலையில் எப்படியாவது பைனல் வந்துவிடுவோம் என எண்ணி வந்த நிலையில் மைனா திடீர் திருப்பமாக யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஸ்பாட் எவிக்சனில் வெளியேற்றப்பட்டார். இதனைதொடர்ந்து தற்போது பிக்பாஸ்

டைட்டிலுக்காக அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இதில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார்கள் என தெரியாத நிலையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நேற்றைய நாளில் இறுதி போட்டியாளர்களை ஊக்குவிக்கும் பிக்பாஸ் அவர்களிடம் சில அறிவுரைகளை கூறி இருந்தார். அதில் விக்ரமனிடம் வெளியிலும் உங்கள் புரட்சி தொடரட்டும் என கூறியதோடு அசீமிடம்

உங்களின் கோபத்தை குறைத்து வாழ்க்கை தொடங்க வாழ்த்துக்கள் என கூறியிருப்பார். இந்நிலையில் இந்த ப்ரோமோ முடிவில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரோ அவரை புகழ்ந்து பேசியிருப்பார் பிக்பாஸ். இதைபார்த்த ரசிகர்கள் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் அசீம் இரண்டாம் இடம் மற்றும் ஷிவின் மூன்றாவது என அவரவர் கருத்துகளை கூறி வருகின்றனர். இதையடுத்து இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….