தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபட்டு வருவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் தங்களை வெகு பிரபலபடுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி டிஆர்பியில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருவதோடு பலரையும் தனது பலத்த ரசிகர்களாக வைத்திருக்கும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து

கொண்டு பலரும் தங்களை மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டி சென்றவர் பிரபல நடிகை ஸ்ருதிகா. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் அந்தா வகையில் ஸ்ரீ, ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே போன்ற பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலம் கிடைக்காத

நிலையில் நடிப்பை விடுத்து தனது தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலம் நடிகையாக இருந்த போது கிடைத்த வரவேற்பை தாண்டி பல மடங்கு பிரபலமாகியுள்ளார் எனலாம். மேலும் இவர் பழம்பெரும் பிரபல முன்னணி நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேத்தியும் கூட இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை

தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது கல்யாணத்தின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார் இதற்கிடையில் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னது ஸ்ருதிகாவா இது என வாயடைத்து போகும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார்………