தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளும் தற்போது அவ்வளவாக படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய் வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் 90-களின் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை சினேகா. படங்களில் கில்மாவாக நடித்தால் மட்டுமே நீடித்து இருக்க முடியும் எனும் நிலையிலும் தொடர்ந்து பல படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும்
தேர்ந்த நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காத நிலையில் கடந்த சில வருடங்களுக்கு பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மீண்டும் படங்களில் நடித்து வரும்
சினேகா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய அதில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மூன்று
வயதை கடந்த அவரது மகளான ஆத்யாந்தவின் பிறந்தநாளை குழந்தைகள் ஆசிரமத்தில் சிறப்பித்துள்ளார். மேலும் இவருக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சினேகா இணையத்தில் வெளியிட்டதை அடுத்து அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்……..
View this post on Instagram