கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சோசியல் மீடியாவில் அதிகளவில் பேசும்போருளாக இருந்த நிகழ்வுகள் என்றால் ஒன்று பிரபல முன்னணி நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் இவர்களை தாண்டி அதிகளவில் வைரலாக இருந்த நிகழ்வு என்றால் அது பிரபல முன்னணி சீரியல் நடிகையான மகாலட்சுமியின் திருமணம் தான். காரணம் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் தனது கணவருடன் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வரும்

மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடிக்கும் ஈஸ்வரனுடன் நெருக்கமாக இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி அது இறுதியில் போலீஸ் கோர்ட் சென்றது. இவ்வாறு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத புது திருப்பமாக பிரபல முன்னணி பட தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாக உடல் பருமனாக உள்ள ரவீந்தருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மேற்கொண்டு

பணத்துக்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டதாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் படி பல பேட்டி கொடுத்து இருந்தார்கள். இதையடுத்து இருவரும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி இருவரும்நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு பலரையும் வெறுப்படைய செய்து வந்தனர். இவ்வாறு இருக்கையில் திருமணத்திற்கு

பிறகும் தொடர்ந்து மகாலட்சுமி சீரியலில் நடித்து வரும் நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக பல தகல்வல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் இந்த தகவல்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ……