தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் எத்தனயோ பல புதுமுக நடிகர் நடிகைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு தங்களது நடிப்பின் மூலமாக வெகுவாக மக்கள மனதை கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு முன்மாதிரியாக அந்த காலத்திலேயே படங்களில் நடித்த பல முன்னணி பிரபலங்களும் இன்றளவும் மக்கள் மனதில் தங்களது நடிப்பு திறமையின் மூலமாக தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி இன்றைக்கு படங்களில் நடித்து வரும் பல இளம் ஹீரோக்களின் படங்கள் வரை அணைத்து

படங்களிலும் காமெடி, செண்டிமெண்ட் என பல மாறுபட்ட குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஆச்சி மனோரமா. அந்த காலத்தில் இருந்து நடித்து வரும் மனோரமா அவர்கள் ஏறக்குறைய ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பிரபலமாக நடித்து வந்த நிலையில் கடந்த    1964-ம் ஆண்டு ராமநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு பூபதி எனும் மகன் ஒருவர் உள்ள நிலையில் திருமணமாகி இரண்டு வருடங்களே சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில

கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பிரிந்து விட்டனர். இதனைதொடர்ந்து தனது மகனுடன் தனித்து வாழ்ந்து வந்த மனோரமா அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக காலமானார். இப்படி இருக்கையில் இவரது மகன் குறித்த சில தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் அவரது மகனான பூபதி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த குடும்பம் ஒரு கதம்பம் எனும் படத்தின் திரையுலகில் நடிகராக அறிமுகமான நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு மக்கள்

மத்தியில் அவ்வளவாக பிரபலம் கிடைக்காத நிலையில் பட  வாய்ப்புகளும் இல்லாமல் போனது இதனால் மனதளவில் நொந்து போனதை அடுத்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் இன்னல்களுக்கு ஆளானர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொரோனா காரணமாக மதுகடைகள் மூடப்பட்டதை அடுத்து மது இல்லாத விரக்தியில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……