தென்னிந்திய சினிமாவில் படங்களில் நடிக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் படங்களில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பதை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் பலரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூர்யா. இந்நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக ஹீரோவாக நடித்து வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைதொடர்ந்து பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான விக்ரம் படத்தின் சிறப்பு தோற்றமாக ரொலெக்ஸ் கதாபத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து

வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்ததை அடுத்து இவர்களுக்கு  தேவ் எனும் மகனும் தியா எனும் மகளும் உள்ளார்கள். இந்நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா தற்போது பல படங்களில்

பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அடிக்கடி தங்களது குடும்ப புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது மகள் மற்றும் மகனுடன் ஒன்றாக இருக்கும் படியான புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மகளை பார்த்த பலரும் என்னங்க இப்படி வளர்ந்துட்டாங்க அடுத்த ஹீரோயின் ரெடி போல அவரை வர்ணித்து வருகின்றனர்…….