தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டே காணாமல் போனதோடு தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர் அப்படியொரு நிலையில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் ஹீரோயினாக நடித்து பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வந்ததோடு திரையுலகில் முன்னணி நடிகைகள் மத்தியில்

தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பானுப்ரியா. இந்நிலையில் தமிழ், தெளுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அபிநயா எனும் மகள் ஒருவரும் உள்ளதை அடுத்து திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக நடிக்காமல் குடும்பத்தை கவனித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி

கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம் , சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இவ்வாறு இருக்கையில் நடிகை பானுப்ரியா அவர்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்த நிலையில் தனது நினைவாற்றலை இழந்து விட்டதாகவும் அதன் காரணமாக படங்களில் வசனங்களை கூட சொல்ல தடுமாறி வருவதாகவும் பல

தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள பானுப்ரியா, என்னை பற்றி வரும் வந்தந்திகள் முற்றிலும் பொய்யானது நான் தற்போது நடந்த முன்னாள் நடிகர்களின் ரீயுனியனில் கலந்துகொள்ளாததற்கு காரணம் யாரும் எனக்கு அழைப்பு கொடுக்கவில்லை அதோடு எனது மகள் இலண்டனில் படித்து வருகிறாள் அதனால் அவரை பார்த்து கொள்வது, புத்தகம் படிப்பது வீட்டு வேலைகளை செய்வது செம பிசியாக இருந்து வருகிறேன் என கூறியுள்ளார்…….