பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு பெரும்பாலும் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாமல் வெறுமனே ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் அவலநிலை அந்த காலத்தில் இருந்து அரங்கேறி வந்தது. இருப்பினும் தற்போது அந்த நிலை மாறிய நிலையில் பல படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதோடு கதையின் நாயகியாக பல நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து பலரது

கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை விஜயசாந்தி. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது வீரமிக்க நடிப்பால் பலரது மனதிலும் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமான இவர் ரஜினி,கமல், சீரஞ்சீவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து

அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மூவரில் ரஜினி,அமிதாப் பச்சன் அடுத்ததாக விஜயசாந்தி இருந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் அரசியல் மீது ஆர்வம் கொண்டு அதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜயசாந்தி தனக்கு நடந்த பல இன்னல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் ஒரு முறை விமானத்தில் செல்லும்

போது விபத்து ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட நிலையில் அடுத்ததாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பின் ஒருவழியாக காப்பாற்றபட்டுள்ளார். இதனையடுத்து ஒருமுறை டி விபத்தில் சிக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து தப்பித்து தான் தற்போது உயரி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் சமீபத்திய அவரது புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………