பொதுவாக மக்கள் மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து சீசன்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி உலகளவில் பலரையும் ரசிகர்களாக வைத்திருக்கும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இதில் 21பிரபலங்கள் கலந்து கொண்டனர் இதையடுத்து மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இறுதி வாரத்தில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர்

இறுதி வாரத்தில் பிக்பாஸ் டைட்டிலுக்காவும் பரிசுதொகை ஐம்பது லட்சத்துக்கும் போட்டி போட்ட நிலையில் மக்களின் அமோக வரவேற்பின் காரணமாக அசீமின் பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டிலை தட்டி சென்றார் . இருப்பினும் இவர் மீது சீசன் துவக்க வாரத்தில் இருந்தே பல சர்ச்சையான விவாதங்களும் கருத்துகளும் இருந்து வந்த நிலையில் இவர் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே அசீமிற்கும் சக போட்டியாளரான விஜே மகேஸ்வரிக்கும் இடையில் பல வாக்குவாதங்களும் பிரச்சனைகளும் இருந்து வந்த

நிலையில் இந்த சீசனில் இருந்து வெளியேறி மீண்டும் விருந்தினராக வீட்டிற்குள் வந்த போதும் இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் தொடர்ந்து இருந்து வந்தது. இப்படி இருக்கையில் சமீபத்தில் விஜே மகேஸ்வரி காவல் நிலையத்தில் அசீம் தரப்பினர் மீது புகார் கொடுத்துள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் விஜே மகேஸ்வரி பிக்பாசில் இருந்து வெளியே வந்த பின்பு தனது இணைய பக்கத்தில் அசீம் குறித்து

பல அவதூறான கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனால் மிகுந்த கோபத்துக்கு உள்ளான அசீம் தரப்பு ரசிகர்கள் அவரை வெளுத்துவாங்கி வந்தனர். இந்நிலையில் விஜே மகேஸ்வரி போலீஸ் புகாரில் என்னை குறித்து என்ன வேண்டும் ஆனாலும் பேசுங்கள் ஆனால் எனது மகனை குறித்து தவறாக பேசாதீர்கள் என எச்சரிக்கை கொடுத்து இருந்தார் இருந்தும் அது தொடர்ந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து இன்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி வருகிறது……..