தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களும் அதோடு பல புதுமுக இளம் நடிகர்களும் திரையுலகில் அறிமுகமாகி ஓசூ சில படங்களிலேயே தங்களது நடிப்பின் மூலமாக மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் வெளிவந்த பல வெற்றிபடங்களும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு அதில் நடித்த நடிகர்களும் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் பலரின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள் எனலாம்., அந்த வகையில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அழகி. இந்நிலையில் இந்த படத்தில் நந்திதா தாஸ், தேவயாணி  என பல முன்னணி திரை பிரபலங்களும் நடித்திருந்தார்கள். இப்படி இருக்கையில் இந்த படத்தில் வரும் பள்ளிபருவ காட்சிகள் பலரது பள்ளிபருவத்தை நினைவுக்கு கொண்டு வருவது போல் இருந்தது எனலாம். இதையடுத்து இந்த படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் சதீஷ். இவர்

இந்த படத்தை தொடர்ந்து சொல்ல மறந்த கதை போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தா நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த நான் மகான் அல்ல படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு படங்களில் தொடர்ந்து துணை நடிகராக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுக இயக்குனர் எஸ் கே மதி இயக்கத்தில் கூட்டாளி எனும் படத்தில் ஹீரோவாக

நடித்துள்ளார். மேலும் இந்த படம் பாதியிலேயே நின்று போனது எனவும் இந்த படம் வெளியாகி தோல்வியை தழுவியதாகவும் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சதீஷ் இந்த படத்தின் கதையை வைத்து தான் ஸ்கெட்ச் படத்தை எடுத்து உள்ளதாகவும் அது முழுக்க எங்களுடைய கதை என்றும் கூறியது மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதில் அவரை பார்த்த பலரும் அழகி படத்துல நடிச்ச சின்ன பார்த்திபனா இது என வாயடைத்து போயுள்ளனர்……