பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஆயிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெளியாகி பிரபல முன்னணி தொடரான சத்யா தொடரில் கதையின் நாயகியாக நடித்து வந்த நிலையில் தனது நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் .

இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் சில வாரங்களே தாக்குபிடித்து இருந்தாலும் பல சர்ச்சையான வாக்குவாதங்கள் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே இவரது காதல் வாழ்க்கை குறித்த பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இதனைதொடர்ந்து அவரது முன்னாள் காதலர் இவர் குறித்து பல தகவல்களை வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தார்.

இப்படி இருக்கையில் ஆயிஷா அவரை வவிடுத்து வேறு நபரை காதலித்து வந்த நிலையில் அவர் யாரென தெரியாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காதலர் தினத்தில் தனது இணைய பக்கத்தில் தனது காதலர் தனக்கு ப்ரொபோஸ் செய்யும் படியான புகைபடத்தை வெளியிட்டு இருந்தார் இருந்தும் அதில் அவரது முகம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ஆயிஷா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும்

படியான புகைபடத்தை பதிவிட்டதோடு தனக்கு காதலர் தினத்தில் நிச்சயம் முடிந்த தகவலையும் பல புகைபடங்களையும் பதிவிட்டுள்ளார் . இந்நிலையில் ஆயீஷாவுக்கும் பிரபல பேஷன் புகைப்பட கலைஞர் ஹரன் ரெட்டிக்கும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் நடந்த நிலையில் அதற்கு சாட்சியாக இருவரும் மோதிரம் மாற்றிகொண்டுள்ளனர். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….