தென்னிந்திய சினிமாவில் அந்த காலத்தில் தொடங்கி இன்றளவு வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏறக்குறைய பல  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாடகி இசைக்குயில் சித்ரா. மேலும் சொல்லபோனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது இனிமையான குரலின் பல பாடல்களை பாடியுள்ளதொடு அந்த பாடலை கேட்டாலே இது சித்ராவின் குரல் தான் எனும் அளவிற்கு மக்கள் மத்தியில்

பரிட்சியமாக உள்ளார். இந்நிலையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட சித்ரா அவர்கள் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி நாற்பது வருடங்களுக்கு மேலாகும் நிலையில் இதுவரை 25000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் . அந்த வகையில் ரமில், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி என பல மொழிகளில் பாடியுள்ள நிலையில் பல சர்வதேச விருதுகள் மற்றும் மாநில விருதுகளையும் வாங்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பாடி வந்த

 

நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு நந்தனா எனும் மகள் ஒருவரும் இருந்தார். இப்படி இருக்கையில் தனது மகளின் மீது அலாதி ப்ரியம் கொண்ட சித்ரா அவர்கள் எங்கு சென்றாலும் அவரது மகளையும் உடன் அழைத்து செல்லும் நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு துபாய் சென்ற நிலையில் மகளையும் அழைத்து சென்றிருந்த போது தவறுதலாக நீச்சல் குளத்தில் மூழ்கி அவரது மகள் நந்தனா காலமானார். இதனால்

மனதளவில் மிகுந்த வேதனைக்கு உள்ளான சித்ரா அவரது பெயரில் பல உதவிகளையும் சமூக சேவைகளையும் செய்து வரும் நிலையில் அவரது நினைவு நாளில் அவரது புகைபடத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்., அதில் உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா என கூறியுள்ளார் இந்நிலையில் இந்த பதிவு மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது…….