தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ அந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளதோடு தனது பப்ளியான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பலரது மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் . இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரும்

இயக்குனருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இருமகள்களும் உள்ளார்கள். இப்படி இருக்கையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் அவ்வளவாக வாய்ப்புக்கள் வராத நிலையில் அரசியல் மீது ஆர்வம் கொண்டு பாஜக கட்சியில் இணைந்து தேர்தலில் வாக்கு சேகரித்து வந்தார். இப்படி இருக்கையில் தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தனது அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும்

விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியானஅண்ணாத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் குஷ்பூ சமீபத்தில் ஆந்திராவில் பிரமாண்டமான பங்களா ஒன்றை பல கோடிக்கு வாங்கியுள்ளதாக பல தகவல்கள இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் குஷ்பூ தற்போது அரசியலில் அடுத்த கட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அலுவலகமாக ஆந்திராவில் புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிக்கை நிருபர் ஒருவர் தனது பதிவில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………