தற்போது தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகர்களும் தொடர்ந்து படங்களில் புதுமுகங்களாக அறிமுகமாகி திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு இணையாக அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருவதோடு பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் தற்போது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த

படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் வெகுவாக நடந்து வருகிறது. இப்படியிருக்கையில் தளபதி விஜய் அவர்களுக்கு அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையில் தொடர்ந்து சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் அது கடந்த சில நாட்களாக முற்றிப்போன நிலையில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது . இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டபோது தளபதி விஜய் அவர்கள் கடந்த சில வருடங்களாக கலந்து கொள்ளும்

அணைத்து நிகழ்ச்சிகள் படபிடிப்புகளில் அவரது மனைவி அவருடன் ஒன்றாக வந்து சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவரும் தனியே பிரிந்து இருந்து வருகின்றனர். இதனைதொடர்ந்து லியோ படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான போதே பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் அதற்கு ஏற்றாற்போல் த்ரிஷா காஷ்மீர் சென்ற சில நாட்களிலேயே

சென்னைக்கு திரும்பி விட்டார் . இதற்கு காரணம் என பல கூறி வந்த நிலையில் இதற்கு முழுக்க காரணமே சென்னையில் இருந்து அவருக்கு தொடர்ந்து கொடுக்கபட்டு வந்த அழுத்தமே என பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது இணைய பக்கத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………