தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்கள் தங்களை ரசிகர்கள் மத்தியில் அழகாக காண்பித்து கொள்ள பலவிதமான முயற்சிகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல

முன்னணி நடிகைகளும் தங்களது உடல் பாகங்களை பலவிதமான முறையில் சிகிச்சை செய்து அழகாக மாற்றிக்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பலரையும் தனது பப்ளியான தோற்றதால் கவர்ந்து தனி ரசிகர் பட்டாளமே வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா மொத்வனி. இவ்வாறு இருக்கையில் இவருக்கு கடந்த சில வருடங்களாக அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்ததை அடுத்து அடுத்த கட்டமாக

திருமணம் செய்து கொள்ள ,முடிவு செய்து தனது தொழில் பார்ட்னரும் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவருமான சொஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து தற்போது அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் வரும் நிலையில் ஹன்சிகா அவர்கள் தன்னை பெரிதாக்க ஹார்மோன் ஊசி போட்டு கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள ஹன்சிகாவின் அம்மா கூறுகையில் , ஹன்சிகா வளர்வதற்கு

ஹார்மோன் ஊசி ஏதும் போடவில்லை அறிவு இல்லாதவர்கள் தான் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர் . அதோடு ஹார்மோன் ஊசிகளை எல்லாம் பயன்படுத்துவதற்கு அப்போது நாங்கள் ஒன்னும் பணக்காரர்கள் இல்லை . நாங்கள் பஞ்சாபியர்கள் எங்கள் குழந்தைகள் இயற்கையாகவே குழந்தை பருவத்தில் வேகமாக வளருவார்கள் என பதிலடி கொடுத்துள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..