தற்போது மக்கள் மத்தியில் திரையுலகில் படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமாபவர்களே அதிகமா உள்ளனர் எனலாம். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி

நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைதொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டதை அடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் மேலும் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும்  லியோ படத்தில் நடித்து வருவதாக கூட பல தகவல்கள் இணையத்தில்

வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அபிராமி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தான் புதிதாக போட்டுள்ள டாட்டூவை வெளிகாட்டும் விதமாக போஸ் கொடுத்து

புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதையடுத்து இரண்டு டாட்டூக்களை போட்டுள்ள அபிராமி தனது ஆன்மீகம் மற்றும் நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தை காட்டும் வகையில் நடராஜர் உருவத்தை தனது முதுகில் போட்டுள்ளதொடு பாம்பு டாட்டூவை தனது வலது கையின் அடிபகுதியில் போட்டுள்ளார். இதனைதொடர்ந்து இதைபார்த்த பலரும் அம்மிணியை சரமாரியாக திட்டி தீர்த்து வருவதோடு பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்……….