தற்போது தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி மக்கள் மத்தியில் அதிகளவில் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருப்பது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் வருகைக்காக தான். இப்படி இருக்கையில் இந்த படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் வெகு மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் குறித்த பல அப்டேட்களை படக்குழுவினர் அவ்வபோது வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். மேலும்

லோகேஷ் அவர்கள் தனது கடந்த படமான விக்ரம் படத்திலேயே அவர் இதற்கு முன்னர் எடுத்த அணைத்து படங்களின் தொடர்ச்சியையும் அதில் வைத்திருந்தார். அதேபோல் இந்த படமும் இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான் , அர்ஜுன் , சஞ்சய் தத், கவுதம் மேனன், மேத்யு, த்ரிஷா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில்

தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் லியோ படத்திற்காக திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி வருபவர் பிரபல முன்னணி பிரபலம் ரத்னகுமார் இவ்வாறான நிலையில் அவர் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கையில்

உடைந்த கண்ணாடி ஒன்றை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளதோடு அதில் நெவெர் சே டை எனவும் பதிவிட்டுள்ளார். இப்படி இருக்கையில் அவர் கையில் பிடித்து இருப்பது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியின் உடைந்த பாகம் எனவும் அவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது………