தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் நடிப்பதை அடுத்து தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிம்பு . தனது சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வரும் சிம்பு அவர்கள் மக்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் ஓரளவு

தோல்வியை தழுவிய நிலையில் சில காலம் நடிப்பதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக மாநாடு படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு மீண்டும் திரையுலகில் பலத்த  பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது இதனைதொடர்ந்து அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக

நடித்து வரும் நிலையில் சமீபத்தில் சிம்பு அவர்களுக்கு இலங்கை பெண் ஒருவருடன் ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாகவும்  விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் பல நடிகைகளுடன் காதல் திருமணம் என பல செய்திகள் இணையத்தில் வந்த வண்ணம் இருந்த நிலையில் இவரது திருமணம் குறித்து பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு

செய்து பெண் பார்த்து வந்த நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை பேசி முடித்துள்ளதாகவும் அவர் பெரிய கோடிஸ்வரரின் மகள் எனவும் அவர் மருத்துவ படிப்பை முடித்துள்ள அவர் பலத்த சிம்பு ரசிகை எனும் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளாராம் . மேலும் அவரது தந்தை பல வேறு தொழில்களை செய்து வரும் பிரபல முன்னணி தொழிலதிபர் எனும் நிலையில் இவர்களது திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது………