தற்போது திரையுலகில் படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமனவர்களே அதிகம் எனலாம் . அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலரும் தங்களை வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது இயல்பான

குணத்தால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டவர் தாமரை செல்வி . மேடை நாடக கலைஞரான இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நிலையில் தனது மொத்த குடும்பத்தையும் தனி ஒருவராக கவனித்து வந்த நிலையில் இந்த நிகழ்ச்சயில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தற்போது பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடன போட்டியில் கலந்து

கொண்டு அதன் இறுதி வரை வந்திருந்தார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தாமரையின் குடும்பம் குறித்த பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாமரை தனது இளம் வயதில் ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் உள்ளவரை முதல் திருமணம் செய்து கொண்டு அவருடன் மகன் ஒருவரையும் பெற்று கொண்டார் . இதையடுத்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்து

வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இதையடுத்து சில காலம் தனிமையில் வாழ்ந்து வந்த தாமரை அடுத்ததாக இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளார்கள் . இந்நிலையில் சமீபத்தில் முதல் கணவரின் மகன் பல வருடங்கள் ஆன நிலையில் தனது தாயான தாமரையை சந்தித்து உள்ளார் இதையடுத்து இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…..