தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டனர் இதற்கு காரணம் இன்றைக்கு திரையுலகில் தொடர்ந்து பல இளம் நடிகைகளும் படங்களில் ஹீரோயினாக களமிறங்கி வரும் நிலையில் பல முன்னனி நடிகைகளுக்கும் படங்களில் அவ்வளவாக வாய்ப்புக்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் ஹீரோயினாக

நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகை ரீமா சென். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே படத்தின் மூலமாக கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்ட இவர் தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை

அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் . மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வந்த ரீமா சென் ஒரு கட்டத்துக்கு மேல் தனது மார்க்கெட் குறைய தொடங்கியதை அடுத்து சினிமாவை விடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 2012-ம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ஷீல கரன்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுவதுமாக முழுக்கு போட்டு குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இவருக்கு

ஆண் குழந்தை ஒருவரும் உள்ளார். இப்படி இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரீமா சென் அடிக்கடி தனது மாடர்ன் புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் மகனின் பத்தாவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ள நிலையில் அதில் எடுக்கப்பட்ட பல புகைபடங்களை பதிவிட்டுள்ளார். இதைபார்த்த அவரது ரசிகர்கள் என்னது இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் …….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Reema Sen (@senreema29)