பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் கடந்தமூன்று சீசன்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிய நிலையில் தற்போது நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ,மற்ற சமையல் போட்டியை மையமாக கொண்ட நிகழ்ச்சியாக இல்லாமல் நகைச்சுவையுடன் கூடிய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது எனலாம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் வெற்றிக்கு முதல் காரணமாக இருந்தது இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வலம் வரும் நகைச்சுவை பிரபலங்கள்

தான் . இந்நிலையில் கடந்த நான்கு சீசன்களாக முன்னணி கோமாளிகளில் ஒருவராக வலம் வருபவர் விஜே மணிமேகலை சன் மியூசிக் சேனலில் விஜேவாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் மணிமேகலை நேற்றைய நாளில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில், இனி நான் வரமாட்டேன் இதுவே குக் வித்

கோமாளியில் எனது கடைசி எபிசொட் இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவு கொடுத்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மேலும் இந்த ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறேன் என வருத்தமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என்ன என தெரியாமல் பலரும் குழம்பி வந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் குக் வித் கோமாளி டீமிற்கும் இவருக்கும் எதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக தான் அவர் தனது பதிவில் கூட அவர்கள் பற்றி எதுவும்

கூறவில்லை என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் செப் வெங்கடேஷ் பட் மணிமேகலை குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதில், மணி நீதான் பேஸ்ட் லேடி கோமாளி நான் சந்தித்தவர்களில் நீயும் சிறந்த மனுஷி அதேபோல் நீ இப்படி எல்லாரையும் மகிழ்விப்பது எல்லாம் உன்கூடவே பொறந்தது. குக் வித் கோமாளியில் உன்னுடைய நினைவுகள் ஏராளம் அதை எதையும் மறக்க மாட்டேன் மேலும் உன் வாழ்வில் நீ சிறந்த நிலைக்கு செல்ல நான் வாழ்த்துகிறேன் கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என கூறியுள்ளார் ………..

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)