தமிழ் சினிமாவில் 80, 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை மீனா தனது சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடித்து வரும் மீனா வளர்ந்த பின்னர் ஹீரோயினாக அறிமுகமாகி ரஜினி, கமல் , அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் . மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ள

மீனாவின் வசீகரமான அழகு மற்றும் நடிப்பிற்கு இளைஞர்கள் பலரது மத்தியிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார் . தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வந்தா நிலையில் மீனா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வித்யாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு நைநிகா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக வாய்ப்புக்கள் வராததை அடுத்து நடிப்பதை சிறிது காலம் விடுத்து தனது குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம்

காட்டி வந்தார். இப்படி இருக்கையில் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் எதிர்பாரதவிதமாக அவரது கணவர் உடல்நலகுறைவு காரணமாக காலமானார். அவரது இழப்பு அவரை மனதளவில் பெரிதாக பாதித்த நிலையில் சில மாதங்கள் தனிமையில் இருந்து வந்த நிலையில் தற்போது தனது நண்பர்களுடன் உதவியுடன் மீண்டும் பழையபடி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் மீனா

திருமணத்திற்கு முன்னரே பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து அது குறித்து விசாரிக்கையில் மீனா வித்யாசாகரை திருமணம் செய்வதற்கு முன்னதாக பிரபல முன்னணி நடிகர் ரித்திக் ரோஷனை காதலித்து வந்ததோடு அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார் . இந்நிலையில் தனது காதலை அவரிடம் சொல்லி திருமணம் செய்யலாம் என எண்ணிய நிலையில் அவருக்கு கல்யாணம் எனும் தகவல் கேட்டு இதயமே நின்று போனதாக கூறியுள்ளார் . இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……….