தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சரத்குமார் இந்நிலையில் இவர் நடிகை ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்னரே இவருக்கு திருமணமான நிலையில் இவருக்கு வரலட்சுமி எனும் மகள் ஒருவர் உள்ளார் . இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடாபோடி படத்தின் மூலமாக கதாநாயகியாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி

கொண்டார் . தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த அம்மிணி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் வில்லி, செண்டிமெண்ட் , குணசித்திரம் என பல மாறுபட்ட

கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவரும் நடிகர் விஷாலும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில் சிறிது காலத்திலேயே அது வெறும் வதந்தியாக போனது. இப்படி இருக்கையில் இவருக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவரது தந்தையும் பிரபல நடிகருமான சரத்குமார் சமீபத்தில் இது குறித்து பேசியுள்ளார். அதில் அது

வரலட்சுமியின் விருப்பம் அதோடு நான் யாரையும் கட்டாயபடுத்துவதில்லை அவர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து விட்டேன் என கூறும் போது அவருக்கு நான் திருமணம் செய்து வைப்பேன் என கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………