தற்போது சினிமாவில் பல துறைகளை சார்ந்தவர்களும் நடிகர்களாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் தமிழ்  சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி அதன் பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி இன்றைக்கு வில்லன், காமெடி , செண்டிமெண்ட் என பல கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்

பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ரவி மரியா. துவக்க காலத்தில் படங்களில் வில்லத்தனத்தில் வேற லெவலில் மிரட்டி வந்த நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக காமெடியில் கலக்கி வருகிறார் . அந்த வகையில் மனம் கொத்தி பறவை , தேசிங்கு ராஜா, இடியட், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களில் இவரது காமெடிக்கு பஞ்சமே இருக்காது எனலாம். இதனைதொடர்ந்து பல

படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இது குறித்து விசாரிக்கையில் இவரது பெயரில் யாரோ போலியான இணைய கணக்கை தொடங்கி அதன் மூலமாக பணம் பறித்து வரும் நிலையில் அது குறித்து நடவடிக்கை

எடுக்கும் படி போலீசில் புகார் கொடுத்துள்ளார் ரவி மரியா . ,மேலும் எனது பெயரில் யாராவது போன் செய்தோ அல்லது மெசேஜ் மூலமாகவோ பணம் கேட்டால்  அனுப்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வேறு மாதிரியாக வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது……..