தற்போது பொறுத்தவரை திரையுலகில் இருக்கும் பிரபலங்களை குறித்த எந்த ஒரு தகவல்கள் வெளியானாலும் அது வெகுவாக இணையத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடும் எனலாம். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் மற்றும் வீக்கத்துடன் இருக்கும் புகைபடத்தை தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அந்த புகைபடத்தை பார்த்த பலரும் அப்படி அவருக்கு என்ன ஆச்சு என்பது போலனா பல கேள்விகளை

தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில் இது குறித்து விசாரிக்கையில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனிகா விக்ரமன். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வரும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களாக அனுப் பிள்ளை என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒன்றாக லிவிங் டூ கேதார் முறையில் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு

வந்ததை அடுத்து தற்போது அந்த விவாதம் முற்றிய நிலையில் அவரது காதலன் இவரை சரமாரியாக தாக்கியுள்ளார் . இதனைதொடர்ந்து அவர் மீது பெங்களூருவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் என்னை சில மாதங்களாக பிசிகல் மற்றும் மான ரீதியாக தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில் இவர் இம்முறை இப்படி செய்வார் என எதிர்பார்க்க வில்லை இதேபோல் ஒருமுறை சென்னையில் நடந்தபோது அவர் எனது காலில் விழுந்து அழுததை அடுத்து

அவரை மன்னித்து விட்டேன் மேலும் இரண்டாவது முறை போலீசில் புகார் கொடுத்தபோதும் அவர் எப்படியோ லஞ்சம் கொடுத்து வெளியே வந்துவிட்டார். இதையடுத்து என்னை எதாவது செய்யவேண்டும் எனும் எண்ணத்தில் இந்த தாக்குதலை திட்டம் போட்டு செய்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……….