சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த மூன்று சீசன்களை வெற்றிகரமாக தற்போது நான்கு சீசனில் அடியெடுத்து வைத்துள்ள பிரபல முன்னணி ரியாலிட்டி குக் வித் கோமாளி . வெறும் சமையலை மட்டுமே மையமாக கொண்டு இல்லாமல் நகைச்சுவை கலந்து வெளியான நிலையில் இதற்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னணி கோமாளிகளில் ஒருவராக வலம் வந்து தனது மாறுபட்ட கெட்டப் மற்றும் நகைச்சுவையான பேச்சு நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் விஜே மணிமேகலை . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பலத்த பிரபலத்தை பெற்ற மணிமேகலை பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் இனி நான்

வரமாட்டேன் இதுவே குக் வித் கோமாளியில் எனது லாஸ்ட் எபிசொட் என பதிவிட்டு இருந்ததை அடுத்து இதற்கான காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வந்தனர். இப்படி இருக்கையில் அதற்கான காரணம் குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் மணிமேகலை கிராமத்தில் சொந்தமாக பெரிய பரப்பிலான காலி நிலம் ஒன்றை வாங்கி அதில் சில மாதங்களுக்கு முன்னர் போர் போட்டிருந்த நிலையில் அதில் தற்போது பெரிய பார்ம் ஹவுஸ் ஒன்றை கட்ட இருப்பதாக

தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இது குறித்து செப் தாமு தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் மணிமேகலை எனது மகள் போன்றவள் அவர் ஷோவை விட்டு போனது எங்கள் குழுவிற்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது . மேலும் இது அவருடைய சொந்த விருப்பம் அடுத்து அவர் தொகுப்பாளர் ஆக உள்ளார் என நினைப்பதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………..

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)