தற்போது உள்ள காலகட்டத்தில் படங்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே அதிகம் எனலாம் . இப்படி இருக்கையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னனி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரபல முன்னணி பிரபலம் விஜே அர்ச்சனா. இந்நிலையில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து

வழங்கி அதன் மூலமாக பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றிக்கொண்டார். இதனைதொடர்ந்து சின்னத்திரையை கடந்த வெள்ளித்திரை பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வினீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஷாரா எனும் மகள் ஒருவரும் உள்ளார் இந்நிலையில் அர்ச்சனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் தனது கணவரை விவாகரத்து செய்யபோவதாக பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில்  எனது கணவர் விணீத் இந்திய கடற்படையில் பணிபுரிந்து வருகிறார் இதையடுத்து இருவரும் வேறு வேறு துறைகளில் இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் இருந்த வந்த நிலையில் நாங்கள் இருவரும் ஒருமனதாக பேசி

முடிவெடுத்து விவாகரத்து செய்து கொள்ள உள்ளோம் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென விசாகபட்டினதுக்கு டிரன்ஷ்பர் செய்து விட்டார்கள் . இந்நிலையில் எங்களது மகள் ஷாரா எங்கள் இருவரிடமும் பேசினார் இனி நீங்கள் இருவரும் ஒருவரை பிரிந்து ஒருவர் வாழ முடியுமா கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் நாங்கள் 20 வருடத்திற்கு முன்னர் எப்படி காதலித்து வந்தோமோ அதேபோல் இந்த பதினைந்து நாட்கள் இருந்து வருகிறோம் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..