தற்போது மக்கள் மத்தியில் திரையுலகில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகளவில் பிரபலமாக இருப்பதோடு அதில் நடிக்கும் பிரபலங்கள் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பிரபலமாகி வரும் நிலையில் இந்த சேனலில் ஆயிரம் எபிசோடுகளை

கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி  வரும் முன்னணி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் . இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ள நிலையில்இந்த தொடருக்கு இளைஞர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த தொடரில் பல முன்னணி சீரியல் பிரபலங்களும் தொடர்ந்து மாறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபல சீரியல் நடிகையான சாய் காயத்ரி இந்த தொடரில்

இருந்து விலக போவதாக அறிவித்து இருந்தார். இதனைதொடர்ந்து இது குறித்து காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சாய் காயத்ரி, ஆரம்பத்தில் தான் நடிக்க வந்தபோது ஐஸ்வர்யா ரோல் பியூட்டி பார்லர் அதோடு சீரியலில் முக்கிய பங்கு இருக்கும் என கூறிய நிலையில் ஒரு வருடம் ஆகியும் அப்படி ஏதும் நடக்கவில்லை அதுமட்டுமின்றி எனது கதாபாத்திரம்

எதிர்மறையாக செல்வது எனக்கு துளியும் பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இருந்தும் விலகபோவது குறித்து கூறியபோது நன்கு யோசித்து கூறும்படி டைம் கொடுத்தார்கள் அதன் பின்னும் நான் எனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………..