பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு தற்போது முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் கடந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பழம்பெரும் முன்னணி

நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் பேரன் அபிநய் நட்டி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது இவர்  குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு அபிநய்  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அபர்ணா என்பவரை கரம் பிடித்தார் . இதையடுத்து இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ள  நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தார் . இருப்பினும் இருவரும் ஒருவழியாக

பேசி சமரசமாக முடிந்த நிலையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அபர்ணா துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார் இந்நிலையில் இவரது கடைக்கு துணிகளை சப்ளை செய்யும் பேஷன் டிசைனர் மஞ்சு . இதையடுத்து மஞ்சு தனது மகளுக்கு மெடிக்கல் சீட் வேண்டும் என கூறிய நிலையில் இதை தெரிந்து கொண்ட அபர்ணா தான் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறியதோடு 20 லட்சம் பணம் தருமாறும் கேட்டுள்ளார். இந்நிலையில் முதல் கட்டமாக  சுமார் ஐந்து லட்சத்தை அனுப்ப கூறிய நிலையில் மஞ்சுவும் அனுப்பியுள்ளார் மேலும் அதற்காக

சான்றிதழ் ஒன்றையும் கொடுத்துள்ளார் அதை எடுத்துகொண்டு மருத்துவக்கல்லூரி சென்று கேட்டபோது இது முற்றிலும் பொய்யானது என கூறியுள்ளனர். அதன் பின்னர் அபர்ணாவை தொடர்புகொண்ட போது அவர் துணிக்கடையை மூடிவிட்டு தலைமறைவாகி உள்ளார் . இதனால் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இதை விசாரித்த போலீசார் அபர்ணாவை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது ……….