தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்நிலையில் இவரது மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது வீட்டில் பணிபுரியும் வேலையாட்களில் இருவர் தனது நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை

திடுடிவிட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடிய நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவரை சுமார்  60 சவரன் நகை திருடியதாக கைது செய்துள்ளனர். இதனைதொடர்ந்து அவரை விசாரணை செய்ததில் அவரும் தான் திருடியதாக ஒப்புகொண்டுள்ளார் இந்நிலையில் ஈஸ்வரியின் வீட்டில் இருந்து சுமார் 100 சவரன் நகை மற்றும் நான்கு கிலோ வெள்ளி30 கிராம் வைர நகைகள்  போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ஐஸ்வர்யா சொன்னதை விட

அதிகமான நகைகள் அவரது வீட்டில் இருந்து எடுக்கபட்ட நிலையில் மேலும்  அவரை விசாரணை செய்ததில் அவர்  ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்வதற்கு முன்னர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த்  வீட்டிலும் செய்துள்ளாராம் . இந்நிலையில் அவர் அங்கேயும் திருடி இருக்கலாம் என கூறிய நிலையில் அவர் சமீபத்தில் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார் . அதில் ஏன் ஐஸ்வர்யா வீட்டில் திருடினேன் என கூறிய நிலையில் நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாடு போல் உழைத்தேன். அவர் சொல்லும் அணைத்து வேலைகளையும் செய்து கொடுப்பேன் அவருக்கு நல்ல

வசதி இருந்தும் எனக்கு மாதம் 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் தருவார் . இந்நிலையில் அந்தகாசு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா அதன் காரணமாக தான் திருட ஆரம்பித்தேன் முதலில் சின்ன சின்னதாக ஆரம்பித்தேன் சில நகைகைளை திருடிய போது அவர் என்னை கண்டுபிடிக்கவில்லை . இந்நிலையில் தொடர்ந்து திருடி இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டியுள்ளேன் இன்னும் விட்டு இருந்தால் நான் கொஞ்சம் அதிகமாக திருடி இருப்பேன் என கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………..