தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சின்னத்திரையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே அதிகம் எனலாம் . இந்நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்படும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி

நிகழ்ச்சிகளில் ஒன்று இசையை மையமாக கொண்டு நகரும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சரிகமபா . இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களது இனிமையான குரலால் வெகுவாக பிரபலமாகி இன்றைக்கு திரையுலகில் பல முன்னனி நடிகர்களின் படங்களில் பின்னணி பாடகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த

நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது காந்த குரலால் பலரையும் வியக்க வைத்தவர் பிரபல பாடகி ரமணியம்மாள் . கிராமத்து பாடல்களை வேற லெவலில் பாடி அசத்தும் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மாள் எனும் பெயரும் உண்டு . இதனைதொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமாகி சினிமாவில் காத்தவராயன் படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானதை அடுத்து ஜூங்கா ,

ஹரிதாஸ் , காப்பான் போன்ற பல முன்னணி நடிகர்களின் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார் . இவ்வாறான நிலையில் ரமணியம்மாள் இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக காலமாகி உள்ளார் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் [பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் பல முன்னணி பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர் ……………..