கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் அதிகளவில் பரபரப்பாக பேசபட்டு வந்த நிகழ்வுகளுள் ஒன்று என்றால் அது பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்கள் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யபோவதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட பதிவு தான். இந்நிலையில் இந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில் பலரும் இவர்களை மீண்டும் ஒன்றாக வாழ வைப்பதற்கு  பல

முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் அளிக்காத நிலையில் இன்றளவு வரை இருவரும் தனித்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் பல கோடி மதிப்பில் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி குடிபுகுந்த நிலையில் அந்த நிகழ்வில் கூட அவரது மனைவி குடும்பத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படியொரு நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஐஸ்வர்யா குறித்த சர்ச்சையான பதிவு ஒன்றை இணையத்தில்

பதிவிட்டுள்ளார். அந்த வகையில் பிரபல சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில், தனுஷ் -ஐஸ்வர்யா விவகாரம் முற்றிய போது ரஜினி அணைத்து பத்திரிக்கை நிருபர்களிடம் அழைத்து இருந்தார். இந்நிலையில் என்ன விஷேசம் என்று கேட்க உங்களுக்கு தெரியாததா…? நீங்கதான் அவங்க ரெண்டுபேரும் காதலிப்பதாக எழுதினீர்கள் ஆகையால் கஸ்தூரி ராஜாவிடம் பெண் எடுத்துகொள்ள உங்களுக்கு சம்மதமா என கேட்டேன் அவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து

அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறினார். இருப்பினும் ஐஸ்வர்யா தனுஷை காதலிப்பதற்கு முன்னரே நடிகர் சிம்புவை காதலித்து இருந்தார் அதோடு பிரபல தொழிலதிபர் மகன் ஒருவரையும் காதலித்து வந்த நிலையில் அவர் மர்மமான முறையில் காலமாகி இருந்தார்.. இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……………